'காளியின் நாகேன் கடைசி வரையிலும்
கீழே தொங்கிக் கிடக்குது வெளியே?
நாக்கைக் காட்டி நவில்வது என்ன?'
என்றே கேட்பின் எடுத்துரைப் பேன்நான்:
நாக்கை அடக்கிப் பேசுக! நாட்டில்
பேச்சால் தானே பிரச்னை எல்லாம்?
தம்பதி பிரிவதும், சகோதரர் பிரிவதும்,
நண்பர்கள் பிரிவதும், நாடுகள் பிரிவதும்
ஒழுங்கிலாப் பேச்சின் ஒருசில வார்த்தையால்
தானே? அதனால் தன்மையாய்ப் பேசினால்
பெரும்போர் கூட பேரிழப் பின்றிச்
சமரசம் எய்திச் சந்தோஷ மாகும்!
ஆகையால் நாக்கை அடக்கிப் பேசுக!
அன்பாய்ப் பேசுக! அமைதியாய்ப் பேசுக!
அறிவாய்ப் பேசுக! அளந்து பேசுக!
நல்லதே பேசுக! நயந்து பேசுக!
யாரிடம் எங்கே எதனைப் பேசணும்,
எப்படிப் பேசணும், எப்போது பேசணும்,
எவ்வளவு பேசணும் என்ப தெல்லாம்
தெரிந்து பேசுக! தெளிவாய்ப் பேசுக!
பொய்பே சாதீர்! புறங்கூ றாதீர்!
குறைசொல் லாதீர்! கோள்மூட் டாதீர்!
குறுக்கே பேசிக் குழப்பமூட் டாதீர்!
எதிர்த்துப் பேசி இழந்துவி டாதீர்!
சிறியோ ரிடத்தும் சிரித்துப் பேசுக!
ஐயந் திரிபற அழகாய்ப் பேசுக!
பணிந்து பேசுக! பாராட்டிப் பேசுக!
பேச வேண்டிய இடத்தில் பேசுக!
பேசா மௌன விரதமும் பேணுக!
இப்படிப்
பேச்சால் நிகழும் பெரும்பெரும் செயலெலாம்
பார்ப்போர் மனத்தில் பசுமரத் தாணிபோல்
பதியச் செய்யவே பயங்கரக் காளி
முழுநாக் கினையும் முகம்கீழ் தொங்க
விட்டுக் காட்டி விழிப்புறச் செய்கிறாள்!
அடுத்த தாக நாச்சுவைக் காக,
கண்டநே ரத்தில் கண்டதைத் தின்று
கண்ட்நோய் பெற்றுத் தண்டனை போல
உடலும் உள்ளமும் வருந்தற்க மனிதா!
நாச்சுவைக் காக நலமிழக் காதே!
செரித்தே உண்க! சேர்வதே உண்க!
அரைத்தே உண்க! அளவாய் உண்க!
பறித்த காய்களும் பழங்களும் உண்க!
பதனப் பெட்டியில் பத்துநாள் வைத்துச்
செத்த உணவைச் சீஎனக் கொள்க!
சமைக்கா உணவைச் சத்தாய் உண்க!
உலர்பழம் பருப்புக் கொட்டைகள் உண்க!
உண்ணா விரதமும் இருந்து பழகுக!
கள்குடிக் காதே! தூள்ஒதுக் காதே!
புகைஇழுக் காதே! புலால்உண் ணாதே!
சாறுகள் குடிப்பாய்! இரசங்கள் குடிப்பாய்!
கொதித்துப்பின் ஆறிய நீரே குடிப்பாய்!
உமிழ்நீ ரெல்லாம் உள்ளே அனுப்புவாய்!
என்றிவை களையும் எடுத்துச் சொல்லவே
இரத்தச் சிவப்பு நாக்கைக்
காளி நீட்டிக் காட்டு கின்றாள்!
***************************************************************************************
உண்பதும் உரைப்பதும் நாவின் பணிகள்!
ஒழுங்காய் இவற்றைநாம் உலகில் செய்யவே
உணர்த்தும் காளியை உவப்புடன் போற்றி
நாவால் உயர்ந்து நலம்பெறு வோமே! 9840382003
கீழே தொங்கிக் கிடக்குது வெளியே?
நாக்கைக் காட்டி நவில்வது என்ன?'
என்றே கேட்பின் எடுத்துரைப் பேன்நான்:
நாக்கை அடக்கிப் பேசுக! நாட்டில்
பேச்சால் தானே பிரச்னை எல்லாம்?
தம்பதி பிரிவதும், சகோதரர் பிரிவதும்,
நண்பர்கள் பிரிவதும், நாடுகள் பிரிவதும்
ஒழுங்கிலாப் பேச்சின் ஒருசில வார்த்தையால்
தானே? அதனால் தன்மையாய்ப் பேசினால்
பெரும்போர் கூட பேரிழப் பின்றிச்
சமரசம் எய்திச் சந்தோஷ மாகும்!
ஆகையால் நாக்கை அடக்கிப் பேசுக!
அன்பாய்ப் பேசுக! அமைதியாய்ப் பேசுக!
அறிவாய்ப் பேசுக! அளந்து பேசுக!
நல்லதே பேசுக! நயந்து பேசுக!
யாரிடம் எங்கே எதனைப் பேசணும்,
எப்படிப் பேசணும், எப்போது பேசணும்,
எவ்வளவு பேசணும் என்ப தெல்லாம்
தெரிந்து பேசுக! தெளிவாய்ப் பேசுக!
பொய்பே சாதீர்! புறங்கூ றாதீர்!
குறைசொல் லாதீர்! கோள்மூட் டாதீர்!
குறுக்கே பேசிக் குழப்பமூட் டாதீர்!
எதிர்த்துப் பேசி இழந்துவி டாதீர்!
சிறியோ ரிடத்தும் சிரித்துப் பேசுக!
ஐயந் திரிபற அழகாய்ப் பேசுக!
பணிந்து பேசுக! பாராட்டிப் பேசுக!
பேச வேண்டிய இடத்தில் பேசுக!
பேசா மௌன விரதமும் பேணுக!
இப்படிப்
பேச்சால் நிகழும் பெரும்பெரும் செயலெலாம்
பார்ப்போர் மனத்தில் பசுமரத் தாணிபோல்
பதியச் செய்யவே பயங்கரக் காளி
முழுநாக் கினையும் முகம்கீழ் தொங்க
விட்டுக் காட்டி விழிப்புறச் செய்கிறாள்!
அடுத்த தாக நாச்சுவைக் காக,
கண்டநே ரத்தில் கண்டதைத் தின்று
கண்ட்நோய் பெற்றுத் தண்டனை போல
உடலும் உள்ளமும் வருந்தற்க மனிதா!
நாச்சுவைக் காக நலமிழக் காதே!
செரித்தே உண்க! சேர்வதே உண்க!
அரைத்தே உண்க! அளவாய் உண்க!
பறித்த காய்களும் பழங்களும் உண்க!
பதனப் பெட்டியில் பத்துநாள் வைத்துச்
செத்த உணவைச் சீஎனக் கொள்க!
சமைக்கா உணவைச் சத்தாய் உண்க!
உலர்பழம் பருப்புக் கொட்டைகள் உண்க!
உண்ணா விரதமும் இருந்து பழகுக!
கள்குடிக் காதே! தூள்ஒதுக் காதே!
புகைஇழுக் காதே! புலால்உண் ணாதே!
சாறுகள் குடிப்பாய்! இரசங்கள் குடிப்பாய்!
கொதித்துப்பின் ஆறிய நீரே குடிப்பாய்!
உமிழ்நீ ரெல்லாம் உள்ளே அனுப்புவாய்!
என்றிவை களையும் எடுத்துச் சொல்லவே
இரத்தச் சிவப்பு நாக்கைக்
காளி நீட்டிக் காட்டு கின்றாள்!
***************************************************************************************
உண்பதும் உரைப்பதும் நாவின் பணிகள்!
ஒழுங்காய் இவற்றைநாம் உலகில் செய்யவே
உணர்த்தும் காளியை உவப்புடன் போற்றி
நாவால் உயர்ந்து நலம்பெறு வோமே! 9840382003
No comments:
Post a Comment