Tuesday, 14 April 2015

27 பிறந்த நேரம் சரியில்லை பெருமாளே


ஆராய்ச்சி மணிகட்டி அரசாண்ட மனுநீதி
அரசர்கள் காலத்தில் பிறந்தேனா?
அணைதந்த கரிகாலன் தலைதந்த குமணன்தன்
அறிஞர்கள் அவையில்தான் இருந்தேனா?

தேர்தந்த வள்ளல்கள் திறம்பாடிப் பரிசாகச்
சீருக்கோர் ஊர்பெற்று மகிழ்ந்தேனா?
சென்றிட்ட இடமெல்லாம் வென்றிட்ட சோழர்கள்
திறமிக்க படையில்வாள் பிடித்தேனா?

பார்போற்றும் சித்தர்கள் புலவர்கள் துறவோர்கள்
பக்கத்தில் பணிசெய்து பயின்றேனா?
பன்னாட்டு வணிகத்தில் அரபுக்கள் யவனர்க்குப்
பட்டோடு பவளங்கள் கொடுத்தேனா?

கூர்கெட்ட பொதுமக்கள் குணங்கெட்ட அரசாங்கம்
கொட்டந்தான் அடிக்கின்ற திருநாட்டில்
கொலைகொள்ளை பசிபஞ்சம் கொடும்லஞ்ச வூழல்கள்
குப்பைக்கு நடுவில்நான் பிறந்தேனே! 9840382003

No comments:

Post a Comment