(கொடுத்த தலைப்பிற்கேற்ப 24 வரிகளுக்குள் எழுதியது)
படிக்கும் வயதில் காதலிப்பார்!
பணியில் லாமல் காதலிப்பார்!
தடுக்கி விழுந்த இடமெல்லாம்
தடியர் இன்று காதலிப்பார்!
படிப்பில் உயர்ந்த நிலையடைந்து
பதவிப் படிகள் பலகடந்து
முடிவில் வீட்டில் பார்ப்பவளை
முடிச்சுப் போட்டுக் காதலிப்போம்!
நம்மை நம்பி வந்தவளை
நன்மை தீமை எதுவரினும்
வெம்மை இன்றிக் காப்பாற்றி
விழிமேல் வைத்துப் போற்றிடுவோம்!
அளவாய்ப் பிள்ளை பெற்றுவைப்போம்!
ஆனந்த வாழ்வைக் கற்றுவைப்போம்!
பிளவே மனதில் தோன்றாமல்
பெருமை சேர வாழ்ந்திருப்போம்!
சாதிக் கின்ற இளமையிலே
சலனப் பட்டுக் காதலித்துப்
பாதிக் கிணறு தாண்டுவதோ?
பாதிப் போடு வாழுவதோ?
புனிதக் காதல் போர்வையிலே
பொய்மை மனிதர் புகுந்துசெயும்
மனிதம் கொன்ற காதலெல்லாம்
மறைக! வாழ்க மெய்க்காதல்! 9840382003
படிக்கும் வயதில் காதலிப்பார்!
பணியில் லாமல் காதலிப்பார்!
தடுக்கி விழுந்த இடமெல்லாம்
தடியர் இன்று காதலிப்பார்!
படிப்பில் உயர்ந்த நிலையடைந்து
பதவிப் படிகள் பலகடந்து
முடிவில் வீட்டில் பார்ப்பவளை
முடிச்சுப் போட்டுக் காதலிப்போம்!
நம்மை நம்பி வந்தவளை
நன்மை தீமை எதுவரினும்
வெம்மை இன்றிக் காப்பாற்றி
விழிமேல் வைத்துப் போற்றிடுவோம்!
அளவாய்ப் பிள்ளை பெற்றுவைப்போம்!
ஆனந்த வாழ்வைக் கற்றுவைப்போம்!
பிளவே மனதில் தோன்றாமல்
பெருமை சேர வாழ்ந்திருப்போம்!
சாதிக் கின்ற இளமையிலே
சலனப் பட்டுக் காதலித்துப்
பாதிக் கிணறு தாண்டுவதோ?
பாதிப் போடு வாழுவதோ?
புனிதக் காதல் போர்வையிலே
பொய்மை மனிதர் புகுந்துசெயும்
மனிதம் கொன்ற காதலெல்லாம்
மறைக! வாழ்க மெய்க்காதல்! 9840382003
No comments:
Post a Comment