Tuesday, 14 April 2015

44 இவள் ஒருத்திதான் பெண்ணா


இவள்ஒ ருத்திதான் பெண்ணா? - மீதி
இருப்பவள் எல்லாம் மண்ணா?
கவலையை விடுவாய் மனமே! - பொய்க்
காதலெல் லாம்சில தினமே!

வளர்க்கும் விதத்திலே தவறு! - சிலர்
வாலிபத் தில்குட்டிச் சுவரு!
கொளுத்தும் வெயிலிலும் கனவு! - பல
குமரிப் பெண்களின் நினைவு!

பெரியவர் கண்டிப்பில் வளர்ந்தாய்! - நீ
பெண்வாடை இன்றியே திரிந்தாய்!
உரிய பருவத்தில் வியந்தாய்! - உன்னை
ஒருபெண் பார்த்தாலே பயந்தாய்!

கிடைத்தது ஒருபெண்ணின் நெருக்கம்! - உன்னுள்
கிடிகிடு கிடுவென நடுக்கம்!
படைத்தவன் முகத்தினில் சிரிப்பு! - உடன்
பற்றி எரிந்தது நெருப்பு!

பார்த்ததைக் காதலாய் நினைத்தாய்! - அவள்
பழக்கத்தில் ஜீவனைக் கொடுத்தாய்!
வார்த்தையை வேதமாய் மதித்தாய்! - உன்
மனதுக்குள் மனைவியாய்த் துதித்தாய்!

வாழ்வே அவளென நினைத்தாய்! - நீ
வரிசையாய்க் கவிதைகள் தொடுத்தாய்!
ஊழ்வே றானதும் அதிர்நதாய்! - உடன்
உயிரற்ற உடல்போல் சரிந்தாய்!

பார்த்ததும் சிரித்ததும் சும்மா! - அவள்
பழகிய பழக்கமும் சும்மா!
ஈர்த்ததும் இழைந்ததும் சும்மா! - நான்
இடிந்து போயினேன் அம்மா! 9840382003

No comments:

Post a Comment