Tuesday, 14 April 2015

40 இரண்டு தெய்வங்கள்


வினாயகர்த் துதி:
**********************
கெட்டுத் திரிந்து கீழ்மையில் உழன்றேன்;
பட்டுத் தெளிந்து பாதங்கள் பணிந்தேன்;
விட்டு விடாதே விநாயகா, உன்னைக்
கட்டித் தொழுதேன்; கரைசேர்ப் பாயே!

காளித் துதி:
***************
கெட்டி ஆயுளும் கிண்ணென்ற உடலும்
தட்டிக் கேட்டிடும் தைரியக் குணமும்
மட்டில் ஞானமும் மதிப்பும் செல்வமும்
கொட்டும் தமிழும் கொடுப்பாய் காளியே! 9840382003

No comments:

Post a Comment