மூலப் பொருளே! முதலாம் பொருளே முழுப்பொருளே!
கால மெல்லாம் கதற வைத்த கருப்பொருளே!
கோல முற்றும் குலைந்து நைந்த குலப்பொருளே!
வேலன் விதித்த விதியால் விளைந்த வினைப்பொருளே!
எந்தாய் எதனைத் தந்தாய் எனினும் எனைத்தந்தாய்!
பந்தாய் உலகம் உதைத்து மகிழ உருத்தந்தாய்!
நொந்தே வாழ்வில் நொறுங்கி மடிய உயிர்தந்தாய்!
சிந்தை கலங்கிச் செயல்கள் குழம்ப மனம்தந்தாய்!
அழைக்க மட்டும் அழகாய்ப் பேரை வைத்தாயே!
பிழைக்கும் வழியைப் பிறகு காட்டிச் சென்றாயா?
உழைக்க உடலும் படிக்க வாய்ப்பும் தந்தாயா?
பழிக்கும் பாவச் செயற்கும் ஆளாய் வந்தாயா?
பிறந்த முதலே உன்னை எனக்குப் பிடிக்காதே!
சிறந்த தொழிலும் நொடித்துப் போச்சாம் என்னாலே!
திறந்த கதவு மூடிக் கொண்டால் என்செய்வேன்?
அறுந்து தொங்கும் விரல்போல் ஆனேன் யார்நோவேன்?
பறந்த எனது சிறகைப் பிடுங்கிப் பழிதீர்த்தாய்!
கறந்த பாலும் கசக்கும் வாழ்வை முன்வைத்தாய்!
மறந்தும் என்னை மகனென் றழைக்க மனமொப்பாய்!
திறந்த உலகில் தெருவில் அலைய எனைவிட்டாய்!
அதிர்ஷ்டம் கெட்ட நாயே என்றே அறைந்தாயே!
எதிரில் வராதே என்றே தினமும் இரைந்தாயே!
புதரில் ஒளியும் முயலாய் வீட்டில் வளர்ந்தேனே!
அதுவும் பொறாமல் மிதித்தாய் வெளியில் விழுந்தேனே!
மண்டி போட வகுப்பில் தினமும் வைத்தாய்நீ!
குண்டி தெரிந்த பிறகே சட்டை தைத்தாய்நீ!
உண்டி ராத உணவே எனக்குச் சோறாகும்!
கண்டி ராத உறவே தந்தை யாராகும்!
குற்றம் சாட்டிக் குற்றம் சாட்டி வளர்த்தாயே!
பற்றி எரிந்த உணர்வில் பாதிச் செத்தேனே!
மற்றோர் கண்ணைப் பார்த்துப் பேசப் பயந்தேனே!
கற்றோர் முன்னால் கூனிக் குறுகிக் குமைந்தேனே!
மட்டம் தாடி மட்டம் தட்டி வளர்த்தாயே!
கட்டித் தங்கம் கருங்கல் ஜல்லி ஆனானே!
ஒட்டோ உறவோ அற்றுத் தனித்துப் போனேனே!
முட்டி மோதி முயன்றும் வெற்றி காணேனே!
தந்தை இல்லை மகனும் இல்லை என்றாயே!
எந்த வழியும் தோன்றா துலகில் நைந்தேனே!
கந்தல் கந்தல் ஆன வாழ்வைக் கண்டேனே!
முந்திச் செய்த பாவம் என்ன நொந்தேனே!
அன்று மனித னாக வந்து வதம்செய்தாய்!
இன்று இறைவ னாகி விட்டாய் இதம்செய்வாய்!
சென்ற கதைகள் மறந்து நின்னைத் துதிக்கின்றேன்!
மன்றில் என்னை மன்ன னாக்க அழைக்கின்றேன்! 9840382003
கால மெல்லாம் கதற வைத்த கருப்பொருளே!
கோல முற்றும் குலைந்து நைந்த குலப்பொருளே!
வேலன் விதித்த விதியால் விளைந்த வினைப்பொருளே!
எந்தாய் எதனைத் தந்தாய் எனினும் எனைத்தந்தாய்!
பந்தாய் உலகம் உதைத்து மகிழ உருத்தந்தாய்!
நொந்தே வாழ்வில் நொறுங்கி மடிய உயிர்தந்தாய்!
சிந்தை கலங்கிச் செயல்கள் குழம்ப மனம்தந்தாய்!
அழைக்க மட்டும் அழகாய்ப் பேரை வைத்தாயே!
பிழைக்கும் வழியைப் பிறகு காட்டிச் சென்றாயா?
உழைக்க உடலும் படிக்க வாய்ப்பும் தந்தாயா?
பழிக்கும் பாவச் செயற்கும் ஆளாய் வந்தாயா?
பிறந்த முதலே உன்னை எனக்குப் பிடிக்காதே!
சிறந்த தொழிலும் நொடித்துப் போச்சாம் என்னாலே!
திறந்த கதவு மூடிக் கொண்டால் என்செய்வேன்?
அறுந்து தொங்கும் விரல்போல் ஆனேன் யார்நோவேன்?
பறந்த எனது சிறகைப் பிடுங்கிப் பழிதீர்த்தாய்!
கறந்த பாலும் கசக்கும் வாழ்வை முன்வைத்தாய்!
மறந்தும் என்னை மகனென் றழைக்க மனமொப்பாய்!
திறந்த உலகில் தெருவில் அலைய எனைவிட்டாய்!
அதிர்ஷ்டம் கெட்ட நாயே என்றே அறைந்தாயே!
எதிரில் வராதே என்றே தினமும் இரைந்தாயே!
புதரில் ஒளியும் முயலாய் வீட்டில் வளர்ந்தேனே!
அதுவும் பொறாமல் மிதித்தாய் வெளியில் விழுந்தேனே!
மண்டி போட வகுப்பில் தினமும் வைத்தாய்நீ!
குண்டி தெரிந்த பிறகே சட்டை தைத்தாய்நீ!
உண்டி ராத உணவே எனக்குச் சோறாகும்!
கண்டி ராத உறவே தந்தை யாராகும்!
குற்றம் சாட்டிக் குற்றம் சாட்டி வளர்த்தாயே!
பற்றி எரிந்த உணர்வில் பாதிச் செத்தேனே!
மற்றோர் கண்ணைப் பார்த்துப் பேசப் பயந்தேனே!
கற்றோர் முன்னால் கூனிக் குறுகிக் குமைந்தேனே!
மட்டம் தாடி மட்டம் தட்டி வளர்த்தாயே!
கட்டித் தங்கம் கருங்கல் ஜல்லி ஆனானே!
ஒட்டோ உறவோ அற்றுத் தனித்துப் போனேனே!
முட்டி மோதி முயன்றும் வெற்றி காணேனே!
தந்தை இல்லை மகனும் இல்லை என்றாயே!
எந்த வழியும் தோன்றா துலகில் நைந்தேனே!
கந்தல் கந்தல் ஆன வாழ்வைக் கண்டேனே!
முந்திச் செய்த பாவம் என்ன நொந்தேனே!
அன்று மனித னாக வந்து வதம்செய்தாய்!
இன்று இறைவ னாகி விட்டாய் இதம்செய்வாய்!
சென்ற கதைகள் மறந்து நின்னைத் துதிக்கின்றேன்!
மன்றில் என்னை மன்ன னாக்க அழைக்கின்றேன்! 9840382003
No comments:
Post a Comment