Tuesday, 14 April 2015

4 ஒரு திரை இசைப் பாடல்

பல ஆண்டுகளுக்கு முன்னர், இசைஞானி இளையராஜா, குமுதம் வாசகர்களுடமிருந்து
ஒரு பாடலாசிரியரைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று, ஒரு தத்த காரத்தையும்,
பாடலுக்கான ஒரு சூழ்நிலையையும் கொடுத்திருந்தார்.
அதற்கேற்ப எழுதிப் பார்த்த பாடல்:

பல்லவி
************
( காதலின் ஆரம்ப அடையாளங்களை உணர்தல்)

தனனனனா னன னானானனா
தனனனனா னன னானானனா

தன்னன்னன னானா
தன்னன்னன னானா
தன்னன்னன னானா
தன்னன்னன னானா

தானா னான னானா னான னானா!

அடிக்கடிஏன் உனை நான்பார்க்கிறேன்?
அதுபுரிந்தால் சிரி, நாள்பார்க்கிறேன்!

கண்ணில்பரி பாஷை!
நெஞ்சில்புது வேட்கை!
பெண்ணுள்எழும் ஆசை!
வெட்கச்சிரிப் போசை

கேட்டேன்! வாழ்வில் நீதான் வேண்டும், வா!வா!

சரணம் 1
**************
( இப்படி ஒரு பெண்ணா என வியத்தல் )

தன
னனனனனன னா னனனனனா
னனனனனன னா னனனனனா
னனனனனன னா னனனனனா
னனனனனன னா னனனனனா

தன்னன னன னானானா
தன்னன னன னானானனா
த்ன்னன னன னானானா
தன்னன னன னானானனா

தனனன னனனா னனனனனா
தனனன னனனா னனனனனா

உனைப்
பகலும்இரவும் நான் நினைக்கவைத்தாய்!
பணியும்உணவும் நான் மறக்கவைத்தாய்!
கண்ணில்படும் அழகே இந்தவிதமோ!
இன்னும்உள்ள அழகே எந்தவிதமோ!

இப்படி ஒரு பாவையை
இத்தனை தினம் காணாமலே
எப்படிப் புவி வாழ்ந்தேனோ,
எவ்விதச் சுகம் காணாமலே?

பருவத்தின் அழகால் கவர்ந்துவிட்டாய்!
பழகிடும் அழகால் உயர்ந்துவிட்டாய்!

மாலை நாளை தோளில் வீழாதோ? ....

சரணம் 2
**************

எனைத்
தொடுதொடுஎனப் பூ முகம்சொல்லுதே!
பிடிபிடிஎன நூல் இடைகெஞ்சுதே!
ஒருமுறை கலந்தால் துயர்விடுமோ!
உள்ளம்பொங்க அணைத்தால் சொர்க்கம்வருமோ!

கண்ணுறக் கமும் காணாதோ,
கன்னியின் மடி சாயாமலே?
பெண்மயக் கமும் தீராதோ,
பிஞ்சுமுத் தங்கள் தாராமலே?

எனக்கெனப் பிறந்தே வளர்ந்தவள்நீ!
உனக்கெனச் சிறந்தே உயர்ந்தவன்நான்!

பாலும் தேனும் ஆறாய் ஓடாதோ? .... 9840382003

No comments:

Post a Comment