எந்தக் கஷ்டத்திலும் முன்னேறலாம்! - நீ
இந்த உலகையொரு கைபார்க்கலாம்!
சொந்த முயற்சிகளைக் கைவிடாதே! - எந்தச்
சோதனைக் கும்அஞ்சி ஓய்ந்திடாதே!
வாழ்க்கை ஆரம்பம் சரியில்லையா? - உனக்கு
வாய்த்த தாய்தந்தை சரியில்லையா?
வாய்ப்பும் வசதிகளும் கிடைக்கலையா? - உன்
வாழ்வில் ஒருபிடிப்பும் இருக்கலையா?
எதையும் நினைத்துமனம் உளையாதே! - நீ
எடுத்த உறுதிகளில் குலையாதே!
எதையும் மாற்றவொரு காலம்வரும்! - உன்
இதயம் புரிந்துதவ தெய்வம்வரும்!
உன்னைப் படைத்தபொழு தேஇறைவன் - நீ
உயரத் திறமைகளும் படைத்துவிட்டான்!
சின்ன விசயங்களில் புழுங்காதே! - உன்
திறமை தேய்ந்துபுத்தி மழுங்காதே!
எந்த மனிதருக்கும் வாழ்க்கையிலே - இங்கு
ஏதோ ஒருவகையில் கஷ்டமுண்டு!
உந்தன் வாழ்விலவை சற்றதிகம்! - மனம்
உடைந்து போயின்உயர் தல்கடினம்!
பந்தை நீர்க்கடியில் மூழ்க்கிவிட்டால் - அது
பாய்ந்து விழுந்தடித்து மேல்வருமே - நீ
அந்தத் துடிதுடிப்பை பெறவேண்டும்! - உன்
ஆற்றல் முழுதும்வெளி வரவேண்டும்!
பத்து முயற்சிசெய்து பிறருயர்ந்தால் - நீ
நூறு முயற்சிசெய்ய வரவேண்டும்!
மொத்த நம்பிக்கையும் பெறவேண்டும்! - புவி
முழுதுன் வேர்வைத்துளி விழவேண்டும்!
உயர்ந்தே ஆவதென நீநினைத்தால் - இங்கே
உன்னைத் தடுப்பதொன்றும் இல்லையடா!
பயந்தே தோற்பதுதான் உலகமடா! - அந்தப்
பயத்தை விட்டவர்க்கே வெற்றியடா! 9840382003
இந்த உலகையொரு கைபார்க்கலாம்!
சொந்த முயற்சிகளைக் கைவிடாதே! - எந்தச்
சோதனைக் கும்அஞ்சி ஓய்ந்திடாதே!
வாழ்க்கை ஆரம்பம் சரியில்லையா? - உனக்கு
வாய்த்த தாய்தந்தை சரியில்லையா?
வாய்ப்பும் வசதிகளும் கிடைக்கலையா? - உன்
வாழ்வில் ஒருபிடிப்பும் இருக்கலையா?
எதையும் நினைத்துமனம் உளையாதே! - நீ
எடுத்த உறுதிகளில் குலையாதே!
எதையும் மாற்றவொரு காலம்வரும்! - உன்
இதயம் புரிந்துதவ தெய்வம்வரும்!
உன்னைப் படைத்தபொழு தேஇறைவன் - நீ
உயரத் திறமைகளும் படைத்துவிட்டான்!
சின்ன விசயங்களில் புழுங்காதே! - உன்
திறமை தேய்ந்துபுத்தி மழுங்காதே!
எந்த மனிதருக்கும் வாழ்க்கையிலே - இங்கு
ஏதோ ஒருவகையில் கஷ்டமுண்டு!
உந்தன் வாழ்விலவை சற்றதிகம்! - மனம்
உடைந்து போயின்உயர் தல்கடினம்!
பந்தை நீர்க்கடியில் மூழ்க்கிவிட்டால் - அது
பாய்ந்து விழுந்தடித்து மேல்வருமே - நீ
அந்தத் துடிதுடிப்பை பெறவேண்டும்! - உன்
ஆற்றல் முழுதும்வெளி வரவேண்டும்!
பத்து முயற்சிசெய்து பிறருயர்ந்தால் - நீ
நூறு முயற்சிசெய்ய வரவேண்டும்!
மொத்த நம்பிக்கையும் பெறவேண்டும்! - புவி
முழுதுன் வேர்வைத்துளி விழவேண்டும்!
உயர்ந்தே ஆவதென நீநினைத்தால் - இங்கே
உன்னைத் தடுப்பதொன்றும் இல்லையடா!
பயந்தே தோற்பதுதான் உலகமடா! - அந்தப்
பயத்தை விட்டவர்க்கே வெற்றியடா! 9840382003
No comments:
Post a Comment