இதுதான் இந்திய தேசமடா! - நீ
எண்ணி வெட்கப்பட வேண்டுமடா!
ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டடா! - அதில்
ஐந்நூறு கோடி ஆள்வோர்க்கடா!
போய்விடும் மீதியும் சூழ்வோர்க்கடா! - இந்தப்
பொய்ஜன நாயகம் யார்யார்க்கடா?
படையெடுத் தந்நியன் கொள்ளையிட்டான்! - இன்று
குடிகெடுத் திந்தியன் கொள்ளையிட்டான்!
பறிகொடுப் பதுதான் உன்விதியா? - தாய்ப்
பரதமே இதுதான் உன்கதியா?
திட்டத்திற் கில்லாப் பணமெல்லாம்
திருட்டமைச் சரிடம் இருக்குமடா!
பட்டத்து வாரிசு முறைபோல - அவர்
பதவிகள் பிள்ளைக்கும் தொடருமடா!
ஜனத்தொகை நூறு கோடியடா! - அதில்
தகுந்தவர் ஆறே கோடியடா!
கணக்கிற்கே மற்ற மீதியடா! - இது
கரைவது எந்தத் தேதியடா?
எழுபது பேர்க்கு விவசாயம்!
இருந்தும் இல்லை ஒருலாபம்!
அழுவதைப் பார்த்தால் பரிதாபம்!
யார்தான் இட்டார் பிடிசாபம்?
வருந்தி உழைப்பவன் விவசாயி! - வெறும்
வாய்ச்சவ டாளன் வியாபாரி!
வருந்தி உழைத்தவன் களைத்துவிட்டான்!
வாய்ச்சவ டாளன் கொழுத்துவிட்டான்!
கைத்தொழில் புரியும் ஏழைகளைக்
கனரக இயந்திரம் நசுக்குமடா!
மெய்த்திறன் கொண்ட மேதைகளை
மேல்நாட் டிற்கே விரட்டுமடா!
எல்லையில் சண்டை வந்துவிட்டால்
எங்கிருந் தோவரும் ஒற்றுமைதான்!
தொல்லைகள் நீங்கி அமைதிவந்தால்
தொலைந்து போகும் சத்தியந்தான்!
தராத நாடெல்லாம் கடன்வாங்கும்! - அதைத்
தகாத் மனிதர்க்குக் கடன்ஈயும்! - பின்
வராத கடனெனக் கணக்கெழுதும்!
வரிகளை மக்களின் தலைசுமக்கும்!
ஓட்டுப் போடாது மேல்மட்டம்! - அதை
ஒழுங்காய்ப் போடாது கீழ்மட்டம்!
ஆட்சியப் பிடிக்கும் தம்பட்டம்! - அது
ஆக்கும் நாட்டைத் தரைமட்டம்!
பாதி விலைக்குத் தங்கநகை - பணம்
பத்து நாளில் இரட்டிப்பு - எனச்
சேதி சொன்னால் அதுபோதும்!
தேசமே வாசலில் திறந்துவிடும்!
தடைசெய்யப் பட்ட மருந்தெல்லாம்
தாராள மாக நடைபோடும்!
குறைகூறப் பட்ட பொருளெல்லாம்
குவியலாய் நல்ல விலைபோகும்!
பெருகுது அந்நியன் முதலீடு! -அதில்
பிழைக்குது இந்தியத் திருநாடு!
கருகுது நம்தொழில் அடியோடு! - இதைக்
கண்டும் காணாது தாய்நாடு!
வரிகட் டாத நடிகர்கள்!
வாடகை தராத அமைச்சர்கள்!
கடன்கட் டாத தொழிலதிபர்!
கைநீட் டுகின்ற வாக்காளர்!
ஒருநாள் மழைக்குக் கெடும்சாலை!
ஓசிக் காசைப் படும்ஏழை!
நெரிசலில் திணறும் முச்சந்தி!
எரிந்து விழுகின்ற சிப்பந்தி!
போலிகள் சுதந்திர நடைபோடும்!
வேலிகள் தினம்தினம் பயிர்மேயும்!
காலிகள் அரசினில் விளையாடும்!
கூலிகள் மக்களின் தலையேறும்!
....................... 9840382003
எண்ணி வெட்கப்பட வேண்டுமடா!
ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டடா! - அதில்
ஐந்நூறு கோடி ஆள்வோர்க்கடா!
போய்விடும் மீதியும் சூழ்வோர்க்கடா! - இந்தப்
பொய்ஜன நாயகம் யார்யார்க்கடா?
படையெடுத் தந்நியன் கொள்ளையிட்டான்! - இன்று
குடிகெடுத் திந்தியன் கொள்ளையிட்டான்!
பறிகொடுப் பதுதான் உன்விதியா? - தாய்ப்
பரதமே இதுதான் உன்கதியா?
திட்டத்திற் கில்லாப் பணமெல்லாம்
திருட்டமைச் சரிடம் இருக்குமடா!
பட்டத்து வாரிசு முறைபோல - அவர்
பதவிகள் பிள்ளைக்கும் தொடருமடா!
ஜனத்தொகை நூறு கோடியடா! - அதில்
தகுந்தவர் ஆறே கோடியடா!
கணக்கிற்கே மற்ற மீதியடா! - இது
கரைவது எந்தத் தேதியடா?
எழுபது பேர்க்கு விவசாயம்!
இருந்தும் இல்லை ஒருலாபம்!
அழுவதைப் பார்த்தால் பரிதாபம்!
யார்தான் இட்டார் பிடிசாபம்?
வருந்தி உழைப்பவன் விவசாயி! - வெறும்
வாய்ச்சவ டாளன் வியாபாரி!
வருந்தி உழைத்தவன் களைத்துவிட்டான்!
வாய்ச்சவ டாளன் கொழுத்துவிட்டான்!
கைத்தொழில் புரியும் ஏழைகளைக்
கனரக இயந்திரம் நசுக்குமடா!
மெய்த்திறன் கொண்ட மேதைகளை
மேல்நாட் டிற்கே விரட்டுமடா!
எல்லையில் சண்டை வந்துவிட்டால்
எங்கிருந் தோவரும் ஒற்றுமைதான்!
தொல்லைகள் நீங்கி அமைதிவந்தால்
தொலைந்து போகும் சத்தியந்தான்!
தராத நாடெல்லாம் கடன்வாங்கும்! - அதைத்
தகாத் மனிதர்க்குக் கடன்ஈயும்! - பின்
வராத கடனெனக் கணக்கெழுதும்!
வரிகளை மக்களின் தலைசுமக்கும்!
ஓட்டுப் போடாது மேல்மட்டம்! - அதை
ஒழுங்காய்ப் போடாது கீழ்மட்டம்!
ஆட்சியப் பிடிக்கும் தம்பட்டம்! - அது
ஆக்கும் நாட்டைத் தரைமட்டம்!
பாதி விலைக்குத் தங்கநகை - பணம்
பத்து நாளில் இரட்டிப்பு - எனச்
சேதி சொன்னால் அதுபோதும்!
தேசமே வாசலில் திறந்துவிடும்!
தடைசெய்யப் பட்ட மருந்தெல்லாம்
தாராள மாக நடைபோடும்!
குறைகூறப் பட்ட பொருளெல்லாம்
குவியலாய் நல்ல விலைபோகும்!
பெருகுது அந்நியன் முதலீடு! -அதில்
பிழைக்குது இந்தியத் திருநாடு!
கருகுது நம்தொழில் அடியோடு! - இதைக்
கண்டும் காணாது தாய்நாடு!
வரிகட் டாத நடிகர்கள்!
வாடகை தராத அமைச்சர்கள்!
கடன்கட் டாத தொழிலதிபர்!
கைநீட் டுகின்ற வாக்காளர்!
ஒருநாள் மழைக்குக் கெடும்சாலை!
ஓசிக் காசைப் படும்ஏழை!
நெரிசலில் திணறும் முச்சந்தி!
எரிந்து விழுகின்ற சிப்பந்தி!
போலிகள் சுதந்திர நடைபோடும்!
வேலிகள் தினம்தினம் பயிர்மேயும்!
காலிகள் அரசினில் விளையாடும்!
கூலிகள் மக்களின் தலையேறும்!
....................... 9840382003
No comments:
Post a Comment