Tuesday, 14 April 2015

7 நீ பிறந்திருக்கும் நாடு


நீபிறந்தி ருக்கும்நாடு இந்தி யாவடா! - அது
நேற்றிருந்த நிலையைக்கொஞ்சம் எண்ணிப் பாரடா!
வாயிருந்தால் அழுதுவிடும் உண்மை தானடா! - அதன்
மைந்தனாகப் பிறந்தநீயும் செய்வ தென்னடா?

உலகத்திற்கே நாகரீகம் கற்றுத் தந்தது! - இன்று
உழவர்களே தூக்குப்போடும் நிலைக்கு வந்தது!
ஞானிகளும் வீரர்களும் தலைமை பூண்டது! - இன்று
நாசகார சக்திகளின் பிடியில் வீழ்ந்தது!

மனிதனென்று பிறந்துவிட்டால் ஜாதி ஒன்றுதான்!
மனமுருக வேண்டிவிட்டால் தெய்வம் ஒன்றுதான்!
நேர்மையாகப் பாடுபட்டால் தொழிலும் ஒன்றுதான்!
நீபிறந்த நாட்டிலிவை தோன்றும் என்றுதான்?

அடிமையாய் இருந்திருந்து புத்தி மழுங்கிட்டோம்!
அந்நியனைப் பெரியவனாய் நினைத்துப் பழகிட்டோம்!
அதிகாரம் செய்வோர்க்கென்றும் அடங்கிக் கிடந்திட்டோம்! - அவன்
அநியாயம் செய்தபோதும் எதிர்க்கப் பயந்திட்டோம்!

......................................... 9840382003

No comments:

Post a Comment