அடுத்த பிறவியிலே - நான்
ஆணாகப் பிறந்திட வேண்டுமடா!
அப்படி பிறக்கையிலே - என்
அருமைப் புருசனும் பெண்பிள்ளையாய்
அவதாரம் எடுத்தே - எனக்கே
ஆசைப்பெண் டாட்டியாய் அமைந்துவிட்டால்,
ஆகா! என்னநடக்கும்? - அதை
அப்படியே சொல்லுகின்றேன், கேட்டுமகிழ்வீர்!
ஹாயாக ஹால்நடுவே - நான்
கால்மேலே கால்போட்டுக் கட்டளையிட்டு
வாயார வைதுமகிழ்வேன்! - அவள்
மாறாக ஏதேனும் முணுமுணுத்தால்
பேயாக மாறிடுவேன்! - தலை
பிடித்துச் சுவரிலே மோதவிடுவேன்!
நாயாகக் குளித்திடுவேன்! - பின்
ராத்திரிக்குக் கால்மாட்டில் விழுந்தழுவேன்!
விடிந்ததும் எழுந்திடுவேன்! - ஓடி
வேகமாய் வெறும்வயிற்றில் குடித்திடுவேன்!
முடிந்ததும் பறந்திடுவேன்! - அடி
மூதேவி சோற்றைப்போடு என்ருகத்துவேன்!
சோற்றிலே கல்கிடந்தால் - அவளைத்
தூக்கிப்போட்டு அப்படியே மிதிமிதிப்பேன்!
வீட்டிலே தூசிருந்தால் - அந்த
விளக்குமாற் றாலேயே சாத்திடுவேன்!
மறுநாள் சினிமாவில் - அவளை
மாறிமாறி முத்தமிட்டுக் கூட்டிவந்து
உருவே தெரியால் - இரவில்
ஓரிடம் விடாமல் சூடுவைப்பேன்!
நகைநட்டைத் திருடிடுவேன்! - வீட்டில்
நகராப் பொருளெல்லாம் அடகுவைப்பேன்!
பகைநெஞ்சும் பதைபதைக்க - அவள்
பலமாதக் கருவை அழித்திடுவேன்!
பத்துப் பவுன்நகையும் - பணம்
ஆபத்தா யிரமும் கொண்டுவந்தால்
வைத்துக் காப்பாற்றுவேன்! -இல்லை
வராதேஎன் றப்பனிடம் விரட்டிடுவேன்!
கண்டபடி ஊர்மேய்வேன்! - பின்
கையில் காசின்றித் தவித்துவிட்டால்
தெண்டனிட் டழுதிடுவேன்! - வீடு
திரும்பிவா திருந்திவிட் டேன்என்பேன்!
கொண்டு வரும்பணத்தில் - நான்
கொஞ்சநாள் குதூகலம் காட்டிமீண்டும்
வண்டுபோல் துளைத்திடுவேன்! - பின்
மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திடுவேன்!
இந்த விதமாக - நான்
எல்லாரும் மெச்சிட வாழ்ந்திருப்பேன்!
கந்த பெருமானே ! - எனக்குக்
கண்டிப்பாய் இந்த வரம்கொடுப்பாய்! 9840382003
ஆணாகப் பிறந்திட வேண்டுமடா!
அப்படி பிறக்கையிலே - என்
அருமைப் புருசனும் பெண்பிள்ளையாய்
அவதாரம் எடுத்தே - எனக்கே
ஆசைப்பெண் டாட்டியாய் அமைந்துவிட்டால்,
ஆகா! என்னநடக்கும்? - அதை
அப்படியே சொல்லுகின்றேன், கேட்டுமகிழ்வீர்!
ஹாயாக ஹால்நடுவே - நான்
கால்மேலே கால்போட்டுக் கட்டளையிட்டு
வாயார வைதுமகிழ்வேன்! - அவள்
மாறாக ஏதேனும் முணுமுணுத்தால்
பேயாக மாறிடுவேன்! - தலை
பிடித்துச் சுவரிலே மோதவிடுவேன்!
நாயாகக் குளித்திடுவேன்! - பின்
ராத்திரிக்குக் கால்மாட்டில் விழுந்தழுவேன்!
விடிந்ததும் எழுந்திடுவேன்! - ஓடி
வேகமாய் வெறும்வயிற்றில் குடித்திடுவேன்!
முடிந்ததும் பறந்திடுவேன்! - அடி
மூதேவி சோற்றைப்போடு என்ருகத்துவேன்!
சோற்றிலே கல்கிடந்தால் - அவளைத்
தூக்கிப்போட்டு அப்படியே மிதிமிதிப்பேன்!
வீட்டிலே தூசிருந்தால் - அந்த
விளக்குமாற் றாலேயே சாத்திடுவேன்!
மறுநாள் சினிமாவில் - அவளை
மாறிமாறி முத்தமிட்டுக் கூட்டிவந்து
உருவே தெரியால் - இரவில்
ஓரிடம் விடாமல் சூடுவைப்பேன்!
நகைநட்டைத் திருடிடுவேன்! - வீட்டில்
நகராப் பொருளெல்லாம் அடகுவைப்பேன்!
பகைநெஞ்சும் பதைபதைக்க - அவள்
பலமாதக் கருவை அழித்திடுவேன்!
பத்துப் பவுன்நகையும் - பணம்
ஆபத்தா யிரமும் கொண்டுவந்தால்
வைத்துக் காப்பாற்றுவேன்! -இல்லை
வராதேஎன் றப்பனிடம் விரட்டிடுவேன்!
கண்டபடி ஊர்மேய்வேன்! - பின்
கையில் காசின்றித் தவித்துவிட்டால்
தெண்டனிட் டழுதிடுவேன்! - வீடு
திரும்பிவா திருந்திவிட் டேன்என்பேன்!
கொண்டு வரும்பணத்தில் - நான்
கொஞ்சநாள் குதூகலம் காட்டிமீண்டும்
வண்டுபோல் துளைத்திடுவேன்! - பின்
மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திடுவேன்!
இந்த விதமாக - நான்
எல்லாரும் மெச்சிட வாழ்ந்திருப்பேன்!
கந்த பெருமானே ! - எனக்குக்
கண்டிப்பாய் இந்த வரம்கொடுப்பாய்! 9840382003
No comments:
Post a Comment